இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
கின்னஸ் சாதனை படைத்த தேசிய விருது நடிகர் பக்ரு. தமிழில் டிஷ்யூம், அதிசய தீவு உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு உப்பு புளி காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். குருராஜா இண்டர் நேஷனல் என்ற நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மலையாள நடிகர் டினிடாம் ஹீரோவாகவும், வங்காள நடிகை பவுலமி ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள். வேதம் புதிது ரபி தேவேந்திரன் இசை அமைக்கிறார், ரமேஷன் ஒளிப்பதிவு செய்கிறார். படம் பற்றிய இயக்குனர் குருராஜா கூறியதாவது:
வேதாளம், விக்ரமாத்தியன் கதையின் அடிப்படையில் உருவாகும் படம். வேதாளம் கதை சொல்லி கேள்வி கேட்பதும், அதற்கு விக்ரமாதித்தன் பதில் சொல்வது மாதிரியான கதை. வேதாளம் சொல்லும் கதை இந்தக் காலத்தில் நடக்கிற கதை. அதில்தான் நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள். வேதாளமாக மலையாள காமெடி நடிகர் பக்ரு நடிக்கிறார் என்றார்.