ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் ரஜினி, தனிக்கட்சி துவங்கி அரசியலுக்கு வருகிறார், அவர் முதல்வராவது உறுதி என தமிழருவி மணியன் பேசினார். காந்திய மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் ரஜினி, அரசியலுக்கு வருவது அவசியமா என்ற தலைப்பில், திருச்சியில் நேற்று, அரசியல் விழிப்புணர்வு மாநாடு நடந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், காந்திய மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் தமிழருவி மணியன் பேசியதாவது:
தமிழகத்தை, 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்ட திராவிடக்கட்சிகள், ஊழலால் சீரழித்துள்ளனர். இரு திராவிடக் கட்சிகளையும் அகற்றி, காமராஜர் ஆட்சியை கொண்டு வர தேடிய போது, ரஜினி என்ற ஆன்மீகவாதி கிடைத்துள்ளார். ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். அது விரைவில் நடக்கும். இதை, அவரது ரசிகர்களிடம் நான் பிரகடனம் செய்கிறேன்.
அரசியல் தொடர்பாக, என்னிடம் அவர் பேசிய போது, நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கட்டளை; அதில் மாற்றம் இல்லை என, உறுதியாக கூறினார். அரசியலுக்கு வந்ததும், அவர் ஆட்சியை பிடிப்பது உறுதி. தமிழகத்தின் தலையாய பிரச்னையான, தண்ணீர் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர, தென்னக நதிகளை இணைக்கும் கனவுத் திட்டம் வைத்துள்ளதாகவும், ஊழலற்ற, வெளிப்படையான ஆட்சியே தன் குறிக்கோள் எனவும், என்னிடம் ரஜினி தெரிவித்தார்.
அ.தி.மு.க., அழிவை நோக்கி செல்கிறது. அதனால், கோட்டையை பிடிப்போம் என, தி.மு.க., நினைக்கிறது; அது நடக்காது. தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் தகுதி ரஜினிக்கு மட்டுமே உள்ளது. ஆகையால், ரசிகர்கள் விமர்சனங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஸ்டாலின் முதல்வர் பதவிக்காக இலவு காத்த கிளியாக இருக்கிறார். அவர், கடைசி வரை அப்படித்தான் இருக்க வேண்டும். பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், இந்த ஆட்சி முடிந்த பின், தேர்தலில் நின்றால், டிபாசிட் கூட வாங்க மாட்டார்கள்.
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்பதால், அவரை முதல்வராக்கும் பணியில், இன்றே ஈடுபட ரசிகர்கள் உறுதியேற்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின், கவுன்ட் டவுண் இப்போது துவங்கியுள்ளது. விரைவில் ஆட்சி கவிழும்; தேர்தல் வரும். தனிக்கட்சி துவங்கி, ரஜினி முதல்வர் ஆவார்.
இவ்வாறு அவர் பேசினார்.