ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அட்லீ - விஜய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள மெர்சல் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தின் இசை வௌியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. விழாவில் பேசிய மெர்சல் இயக்குநர் அட்லீ....
எவ்வளவு சம்பாதிக்கிறேன் என்பதை விட எவ்வளவு பேரை சம்பாதிக்கிறோம் என்பது தான் முக்கியம். விஜய் நல்ல மனிதர். தெறிக்கு பிறகு எனக்கு ஒரு நல்ல அண்ணன் கிடைத்திருக்கிறார். மெர்சல் வாய்ப்பு அவரால் தான் கிடைத்தது. எல்லா படத்திற்கும் நிறைய ஊழைப்பு கொடுக்கிறோம். மெர்சலுக்கு கூடுதலாக உழைத்துள்ளோம்.
மெர்சல் படத்தில் விஜய் அதிகபட்ச உழைப்பை தந்துள்ளார். ரசிகர்களுக்காக அவர் எடுக்கும் முயற்சியை கண்டு வியந்தேன். தெறி படத்தில் 5 ஆக்ஷ்ன் காட்சிகள் இருந்தது, மெர்சல் படத்தில் 15 ஆக்ஷ்ன் காட்சிகள் உள்ளது. தியேட்டர்களின் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நிச்சயம் படம் இருக்கும்.
மெர்சல் படத்தில் 3 விஜய்யா என்றால் எனக்கு தெரியாது, ஆனால் படத்தில் விஜய் ஜோடியாக மூன்று ஹீரோயின் நடித்திருக்கிறார்கள். காமெடியாக மட்டுமே பார்த்த வடிவேலுவை மெர்சல் படத்தில் காமெடியில் மட்டுமல்லாது உணர்ச்சிகரமான காட்சிகளிலும் பார்க்கலாம். ஒருகாலத்தில் மணிவண்ணன் எப்படி நடித்தாரோ, அதுபோன்று இருக்கும்.
எஸ்.ஜே.சூர்யாவிற்கு இந்தப்படம் முக்கியமானதாக இருக்கும். அவரை வெறும் வில்லனாக மட்டுமல்ல, ஹீரோவாகவும் அழகு பார்ப்போம்.
மெர்சல் படம் தமிழர்களின் பாரம்பரியம், அடையாளத்தை பிரதிபலிக்கும் கமர்ஷியல் படமாக இருக்கும். இன்னும் இரண்டு-மூன்று வாரத்தின் மெர்சல் டீசர் வெளிவரும்.
இவ்வாறு அட்லீ பேசினார்.