'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் வெளியான அக்ஷய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா ரூ.100 கோடி வசூலை எட்டி, வெற்றி படமாக ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்படத்தின் சக்சஸ் மீட் சமீபத்தில் நடந்தது. இதில் லண்டனில் இருந்து ஸ்கைப் மூலம் அக்ஷய் குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அக்ஷய் குமார், சமூக ஹீரோ என்ற முத்திரை தனக்கு வேண்டாம் எனவும், அதற்காக சமூக நலன் தொடர்பான படங்களில் நடிக்கவில்லை எனவும் கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு அந்த படம் பிடித்திருந்தால், அதில் நடிப்பேன். ரோபட் 2.0 வில் வில்லன் வேடத்தில் நடித்துள்ளேன். அதே போன்று கோல்ட் என்ற விளையாட்ட சார்ந்த படத்தில் நடித்துள்ளேன். அவைகள் முற்றிலும் வேறுபட்டவை.
நான் சமூக நலம் சார்ந்த படங்களில் மட்டும் நடிக்கவில்லை. அதனால் தயவு செய்து இது போன்ற முத்திரைகளை என் மீது குத்தாதீர்கள் என்றார். அக்ஷய் குமார் தற்போது நடித்து வரும் ரோபட் 2.0 படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25 ம் தேதி ரிலீசாக உள்ளது.