'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சி.வி.குமார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். மாயவன் என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார், அவரிடம் பேசியபோது...
தயாரிப்பாளர் டூ இயக்குனர்?
நான் இதுவரை 18 படங்கள் தயாரித்துள்ளேன். எனக்கு கொஞ்சம் ஸ்கிரிப்ட், எடிட்டிங் தெரியும். பொதுவாக சினிமாவில் எந்த துறையில் இருந்தாலும் அவர்களுக்கு படம் இயக்குவது எளிதாக இருக்கும். அப்படி தான் நானும் வந்தேன்.
மாயவன் யார்?
மாயவன் நாம் கற்பனையை கடந்து பார்க்க முடியாத ஒருவர். நமக்குள் இருக்கும் கேள்விகள் தான் இந்த படம். ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதை. கதை என்னுடையது, வசனம் நலன்குமாரசாமி.
இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் ?
படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க, மூன்று மாதமாக நடிகரை தேடி வந்தோம், பிறகு ஜாக்கியை நடிக்க வைத்தோம். அவரை தவிர வேறு யாரும் இந்த கேரக்டரை செய்திருக்க முடியாது. அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.
படம் ஏன் தாமதம்..
இது பெரிய பட்ஜெட் படம். படம் முடிந்த பின் 4 மாதமாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் நடந்தன. அதனால் தான் இந்த தாமதம்.
உங்கள் நிறுவன நடிகர், இயக்குனர்கள்..
என் நிறுவனத்தில் பணியாற்றிய அட்டக்கத்தி ரஞ்சித், தினேஷ், சந்தோஷ் நாராயணன், விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், பாபு சிம்ஹா போன்றவர்கள் இன்று பிரபலமாக இருப்பதில் எனக்கு பெருமை.
குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு ?
நிறைய புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். அன்று வந்தவர்கள் தங்களை நிரூபிக்க ஒரு களமாக பார்த்தனர், தற்போது வரும் புதியவர்கள் போனில் கூட படமெடுக்கிறார்கள். இது ஒரு விசிட்டிங் கார்டு என்று நினைப்பது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
தயாரிப்பாளருக்கு சினிமா மீது இருக்க வேண்டியது ஆசையா.. காதலா...
காதல், ஆசை இரண்டு படத்தோடு நின்று போய் விடும். சினிமா மீது காதல் இருந்தால்தான் வெற்றி, தோல்வி பாராமல் படம் கொடுக்க முடியும்.
இன்றைய தயாரிப்பாளர்கள் ?
பல பிரச்னைகளை சந்தித்து தான் ஒரு படத்தை வெளியிட முடிகிறது. இங்கு பல துறைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். சங்கத் தலைவர் நடிகர் விஷால் சிறப்பாக செயல்படுகிறார். பொறுப்பு ஏற்ற பிறகு நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
- கவிதா