கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் சி.வி.குமார். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். மாயவன் என்ற படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்குகிறார், அவரிடம் பேசியபோது...
தயாரிப்பாளர் டூ இயக்குனர்?
நான் இதுவரை 18 படங்கள் தயாரித்துள்ளேன். எனக்கு கொஞ்சம் ஸ்கிரிப்ட், எடிட்டிங் தெரியும். பொதுவாக சினிமாவில் எந்த துறையில் இருந்தாலும் அவர்களுக்கு படம் இயக்குவது எளிதாக இருக்கும். அப்படி தான் நானும் வந்தேன்.
மாயவன் யார்?
மாயவன் நாம் கற்பனையை கடந்து பார்க்க முடியாத ஒருவர். நமக்குள் இருக்கும் கேள்விகள் தான் இந்த படம். ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதை. கதை என்னுடையது, வசனம் நலன்குமாரசாமி.
இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் ?
படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க, மூன்று மாதமாக நடிகரை தேடி வந்தோம், பிறகு ஜாக்கியை நடிக்க வைத்தோம். அவரை தவிர வேறு யாரும் இந்த கேரக்டரை செய்திருக்க முடியாது. அவ்வளவு நேர்த்தியான நடிப்பு.
படம் ஏன் தாமதம்..
இது பெரிய பட்ஜெட் படம். படம் முடிந்த பின் 4 மாதமாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் நடந்தன. அதனால் தான் இந்த தாமதம்.
உங்கள் நிறுவன நடிகர், இயக்குனர்கள்..
என் நிறுவனத்தில் பணியாற்றிய அட்டக்கத்தி ரஞ்சித், தினேஷ், சந்தோஷ் நாராயணன், விஜய்சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ், பாபு சிம்ஹா போன்றவர்கள் இன்று பிரபலமாக இருப்பதில் எனக்கு பெருமை.
குறும்பட இயக்குனர்களுக்கு வாய்ப்பு ?
நிறைய புதுமுக இயக்குனர்களை அறிமுகப்படுத்தி உள்ளேன். அன்று வந்தவர்கள் தங்களை நிரூபிக்க ஒரு களமாக பார்த்தனர், தற்போது வரும் புதியவர்கள் போனில் கூட படமெடுக்கிறார்கள். இது ஒரு விசிட்டிங் கார்டு என்று நினைப்பது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.
தயாரிப்பாளருக்கு சினிமா மீது இருக்க வேண்டியது ஆசையா.. காதலா...
காதல், ஆசை இரண்டு படத்தோடு நின்று போய் விடும். சினிமா மீது காதல் இருந்தால்தான் வெற்றி, தோல்வி பாராமல் படம் கொடுக்க முடியும்.
இன்றைய தயாரிப்பாளர்கள் ?
பல பிரச்னைகளை சந்தித்து தான் ஒரு படத்தை வெளியிட முடிகிறது. இங்கு பல துறைகளில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். சங்கத் தலைவர் நடிகர் விஷால் சிறப்பாக செயல்படுகிறார். பொறுப்பு ஏற்ற பிறகு நிறைய மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
- கவிதா