விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப் போகிறவர் என்பது காயத்ரிதான் என்பது உறுதியாகிவிட்டது. சற்று முன் காயத்ரியின் டிவிட்டர் கணக்கில் அவர் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான புரோமோவை ரி-டிவீட் செய்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர்கள் உடனடியாக சமூக வலைத்தளங்களில் செயல்படுவதையோ, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுப்பதையோ தவிர்த்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் ஒப்பந்தம் கூட போட்டிருக்கலாம். குறைந்தது பத்து நாட்களுக்குப் பிறகுதான் அவர்கள் பேட்டிகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள்.
ரசிகர்களின் அதிக ஆதரவை பெற்ற ஓவியா மட்டுமே அடுத்த சில நாட்களிலேயே பொது வெளியில் நடமாடினார். ரசிகர்களும் அவரைச் சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு ஓவியா வீடியோ ஒன்றை வெளியிட்டும் வேண்டுகோள் விடுத்திருந்தார். கடந்த வாரம் வெளியேறிய சக்தி இதுவரை எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை, பேட்டியையும் தரவில்லை.
இதனிடையே, விஜய் டிவியின் டிவிட்டர் கணக்கில் சிறிது நேரத்திற்கு முன்புதான் இன்றைய எவிக்ஷன் பற்றிய புரோமோ வெளியிடப்பட்டது. ஆனால், அந்த புரோமோவை ரிடிவிட் செய்யாமல் ஒரு பிக் பாஸ் ஃபேன் பேஜில் இருந்த இன்றைய புரோமோவை காயத்ரி ரிடிவீட் செய்திருக்கிறார். அதற்குள் ரசிகர்கள் காயத்ரியின் டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினார்கள்.
ஆனால், பத்து நிமிடங்களுக்குள் காயத்ரி அந்த டிவீட்டை நீக்கிவிட்டார். இருந்தும் நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்த காயத்ரியின் டிவிட் இந்தச் செய்தியின் புகைப்படத்தில் இருக்கிறது.