தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களுக்கு பிறகு சந்தானம் நாயகனாக நடித்து வெளியான படம் தில்லுக்குத்துட்டு. ஹாரர் காமெடி கதையில் உருவான இந்த படம் சந்தானத்துக்கு ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, மன்னவன் வந்தானடி, ஓடி ஓடி உழைக்கனும் என பல படங்களில் கமிட்டானார் சந்தானம்.
அப்படி அவர் நடித்த படங்களில் சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா என்ற இரண்டு படங்களும் தற்போது ரிலீசுக்கு தயாராகி விட்டன. இதில் சர்வர் சுந்தரம் படத்தை இந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கத்திலேயே வெளியிட திட்டமிட்டிருந்தார் சந்தானம். ஆனால், அஜீத்தின் விவேகம் ஆகஸ்ட் 10-ந்தேதி வெளியாக இருந்ததால் ஆகஸ்ட் இறுதியில் சர்வர் சுந்தரம் படத்தை வெளியிட திட்டமிட்டார்.
ஆனால், எதிர்பாராதவிதமாக விவேகம் இறுதிகட்ட பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 24-ந்தேதி என முடிவு செய்யப்பட்டது. அதனால் ஆகஸ்ட் இறுதியிலும் தனது படத்தை வெளியிட முடியாது என்பதால் தற்போது செப்டம்பர் முதல் வாரத்தில் சர்வர் சுந்தரம் படத்தை வெளியிடுகிறார் சந்தானம். அதற்கடுத்த மாதமே சக்க போடு போடு ராஜா படத்தை வெளியிடுகிறாராம்.
மேலும், இதற்கு முன்பு நடித்த படங்களில் இருந்து மாறுபட்டு இந்த சர்வர் சுந்தரம் படத்தில் காதல், காமெடி மட்டுமின்றி எமோசனல் காட்சிகளிலும் அதிகமாக நடித்திருக்கிறாராம் சந்தானம். முக்கியமாக படித்த படிப்புக்கேற்ற வேலையைதான் செய்வேன் என்று சொல்லும் இளைஞர் களுக்கு அட்வைஸ் கொடுக்கும் வகையில், படித்த படிப்புக்கு உரிய வேலை கிடைக்காமல் வேறு வேலையை தேடிக்கொண்டு வாழ்க்கையில் ஜெயிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம் சந்தானம்.