பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கௌதம் மேனன் தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நெஞ்சம் மறப்பதில்லை.
இப்படத்தின் தணிக்கை முடிவடைந்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் மே மாதமே வெளிவருவதாக சொல்லப்பட்டது.
பின்னர் ஜூன், ஜூலை என்று தள்ளிப்போய், தற்போது படம் எப்போது வரும் என்றே தெரியாத சூழலில் உள்ளது. இப்படத்தை வாங்கி வெளியிடவுள்ள எஸ்கேப் மதன் பணப் பிரச்சினையில் சிக்கி இருப்பதால், படத்தின் வெளியீடு தள்ளிப் போய்க்கொண்டே இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் செல்வராகவனிடமே நெஞ்சம் மறப்பதில்லை பட வெளியீடு எப்போது என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “படத்தின் வெளியீட்டு தேதி என்னுடைய கையில் இல்லை. தயாரிப்பாளர் மதனுக்குதான் அது தெரியும்.” என்று ஆதங்கத்தோடு பதில் அளித்திருக்கிறார் செல்வராகவன்.
யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கௌதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வாங்கி வெளியிடவுள்ளது.