இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தின் பாடல் காட்சியை ஐரோப்பாவில் உள்ள குரோடியா நாட்டுக்கு சென்ற படக்குழுவினர் அங்குள்ள அருமையான லொகேஷன்களில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட ஒரு பாடலை படமாக்கி வருகின்றனர்.
இந்த பாடல் காட்சியோடு தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறதாம். விக்னேஷ் சிவன் எழுதி, அனிருத் இசையில் வெளியான 'நானா தானா...' என்ற பாடல் ஏற்கெனவே சிங்கிள் டிராக்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விவேகம் வெளியாகி அதன் பரபரப்பு ஓய்ந்த சில நாட்களில் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் மற்றொரு பாடலை சிங்கிள் ட்ராக்காக வெளியிட உள்ளனர்.
தானா சேர்ந்த கூட்டம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமும், 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.