‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
எடுத்த படத்தை பாதியோடு போட்டுவிட்டு புதிய படத்தை ஆரம்பிப்பது, பிறகு அந்தப் படத்தை கிடப்பில் போட்டுவிட்டு, இன்னொரு படத்தை தொடங்குவது என்பதுதான் கௌதம் மேனனின் பாணி. சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தை பாதியில் போட்டுவிட்டு தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தொடங்கினார். பிறகு அதை கிடப்பில் போட்டுவிட்டு, விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் பட வேலையை ஆரம்பித்தார். பின்னர் அதுவும் பாதியில் நிற்பதும், நடப்பதுமாக இருந்தது. ஆனால் அதற்குள் விக்ரம், ஸ்கெட்ச் படத்தில் நடித்து முடித்துவிட்டார்.
விக்ரம், அடுத்தப்படியாக சாமி 2வில் நடிக்க இருப்பதால் கவுதமிடம் தன் நிலையை சொல்லியிருக்கிறார். இதையடுத்து கவுதமும், துருவநட்சத்திரம் படப்பிடிப்பை முடுக்கிவிட்டுள்ளார். 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு 'துருவநட்சத்திரம்' படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொண்டு நடித்து வருகிறார் விக்ரம். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 25 நாட்கள் சென்னையை சுற்றியுள்ள இடங்களில் நடக்க இருக்கிறது.
விக்ரம், அடுத்து ஹரி இயக்கும் 'சாமி-2' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருப்பதால் அதற்கு முன்னதாக 'துருவ நட்சத்திரம்' படத்தை முடித்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம்.