டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
36 வயதினிலே படத்திற்கு பிறகு ஜோதிகா நடித்துள்ள படம் மகளிர் மட்டும். குற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி உள்ளார். ஜோதிகாவுடன் சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா, லிவிங்ஸ்டன், நாசர் நடித்துள்ளனர், சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். "அடி வாடி திமிரா புலியோட்டும் முறமா..." என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சூர்யாவே தயாரித்துள்ளார்.
ஒரு ஆவணப்பட இயக்குனர் நடுத்தர வயதை தாண்டிய பெண்களின் பிரச்சினைகளை பேசுகிற ஒரு படம் தயாரிக்கிறார். இதற்காக அவர்களை அழைத்துக் கொண்டு இந்தியா முழுவதும் சுற்றுகிறார் என்பது மாதிரியான ஒரு பயணக் கதை. காமெடி, செண்டிமெண்டுடன் குடும்ப பெண்களிள் உளவியல் பிரச்சினைகளை பேசுகிற படம். இதில் ஆவணப்பட இயக்குனராக ஜோதிகா நடித்துள்ளார்.
இந்தப் படம் ரிலீசுக்கு ரெடியாக பல மாதங்கள் ஆகிறது. பண மதிப்பிழப்பு, தியேட்டர் ஸ்டிரைக், பெரிய படங்கள் ரிலீஸ் போன்ற பல காரணங்களால் ரிலீஸ் தள்ளிபோடப்பட்டுக்கொண்டே வந்தது. தற்போது அடுத்த மாதம் 15ந் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.