இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் அவரச பொதுக்குழு கூட்டம் நேற்று மாலை ராகேவந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இன்று முறைப்படி அறிவிக்கப்பட இருக்கிறது. நேற்றைய கூட்டம் பற்றி அதில் பங்கேற்ற தயாரிப்பாளர் ஒருவர் கூறியதாவது:
தயாரிப்பாளர் சங்கத்தில் எத்தனையோ பொதுக்குழு கூட்டங்கள் நடந்துள்ளது. ஆனால் நேற்று நடந்ததை போன்று எந்த கூட்டமும் நடந்ததில்லை. விஷால் உட்பட எந்த நிர்வாகிகளும் மேடையில் உட்காராமல் முன்னாள் நிர்வாகிகளையும், மூத்த தயாரிப்பாளர்களையும் மேடையில் உட்காரவைத்து கடைசி வரை நின்று கொண்டு கூட்டத்தை நடத்தினர்
பெப்சி தொழிலாளர்கள் பிரச்சினையில் அனைவரும் உறுதியாக இருந்தனர். எந்த தயாரிப்பாளரும் தனது வசதிக்கேற்ப பெப்சி தொழிலாளர் உள்பட யாரை வேண்டுமானாலும் வைத்து வேலை செய்து கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கு 100 சதவிகித ஆதரவு கிடைத்தது. யாரும் எதிர்ப்பு குரல் கொடுக்கவில்லை. எஸ்.வி.சேகர் உள்ளிட்ட சிலர் புதிய பணியாளர்கள் கேட்டு பேப்பரில் விளம்பரம் கொடுக்கலாம் என்றார்கள்.
தயாரிப்பாளர்களுக்கு புதிய தொழில் வழிகாட்டுதல் புத்தகமாக அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. வேலைக்காரன் பட தயாரிப்பாளர் கட்டுபாட்டை மீறியதால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அவர்மீது நடவடிக்கை எடுக்க சொல்லி வலியுறுத்தினார்கள்.
கியூப் பிரச்சினைக்கும் ஆன் லைன் டிக்கெட் பிரச்சினைக்கும் தியேட்டர் அதிபர்கள் உறுதுணை இருந்தால் மட்டும் தான் அதை செயல்படுத்த முடியும் அதனால் தயாரிப்பாளர் சங்கத்துடன் தியேட்டர் அதிபர்கள் சங்கம் இணைந்து செயல்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் தலைவர் விஷால். அரசு கட்டாயம் பஞ்சாயத்து வரி விதிப்பதாக தகவல் வருவதால் தியேட்டர் அதிபர்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் இணைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
உயர்ந்து வரும் படப்பிடிப்பு செலவுகளை எந்தெந்த வகையில் குறைக்கலாம் என்பதை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது. என்றார் அவர். முன்னதாக கேபிள் ஆபரேட்டர்களுடன் கலந்தாய்வு கூட்டம் ஒன்று நடந்தது. இதிலும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.