பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தெறி படத்திற்கு பிறகு விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தில் அவருடன் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, தேனாண்டாள் பிலிம்ஸின் 100வது படமாக தயாராகி வருகிறது.
வருகிற 20ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கில் மெர்சல் படத்தின் இசை பிரமாண்டமாக வெளியாக உள்ளது. முன்னதாக மெர்சல் படத்தில் ஆளப்போறான், நீதானே பாடல்கள் வெளியாகி ரசிகர்களை நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த இரண்டு பாடல்களும் டுவிட்டரில் டிரெண்ட்டிங்கில் இருந்தன.
இந்நிலையில் டுவிட்டர் இந்தியா, மெர்சல் விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய எமோஜியை வெளியிட்டுள்ளது. சமூக வலைதளங்களில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொம்மையை தான் எமோஜி என்கிறார்கள். எந்த ஒரு தென்னிந்திய நடிகரின் படத்திற்கும் கிடைக்காத அங்கீகாரம் விஜய் படத்திற்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் டுவிட்டரில் எமோஜி பெறும் முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை விஜய்யின் மெர்சல் பெற்றுள்ளது.