ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
இந்த முறை, அதாவது இந்த வெள்ளியன்று படங்களை ரிலீஸ் செய்வதில் தமிழ்நாடு மற்றும் கேரளாவை சேர்ந்த தியேட்டர்கள் ஒரு வித்தியாசமான நடைமுறைய காட்டியுள்ளன. வரும் ஆக-24 (வியாழன்) அன்று அஜித்தின் விவேகம் ரிலீசாக இருப்பதால் இந்தவாரம் தமிழில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. வழக்கமாக கேரளாவிலும் அஜித் படம் ரிலீஸாகும் சமயத்தில் படங்கள் ரிலீசாவதில்லை தான். ஆனால் அதற்கு இன்னும் ஒரு வாரம் (6 நாட்கள் மட்டுமே) இருப்பதால் அந்த இடைவெளியை பயன்படுத்தி இன்று 8 படங்கள் வெளியாகி இருக்கின்றன.
கௌதமி நடித்துள்ள த்ரில்லர் படமான 'ஈ', ஸ்வேதா மேனன் நடித்துள்ள 'நேவல் என்னும் ஜூவல்', மம்தா மோகன்தாஸ், பத்மபிரியா உள்ளிட்ட பத்து கதாநாயகிகள் நடிப்பில் உருவாகியுள்ள 'க்ராஸ்ரோடு', நடிகர் சலீம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கருத்த ஜூதன்', தயாரிப்பாளர் மணியம்பிள்ளை ராஜூவின் மகன் நிரஞ்சன் ராஜூ கதாநாயகனாக அறிமுகமாகும், கதாநாயகியாக மியா நடித்துள்ள 'பாபி', ஆசிப் அலியின் தம்பி அஸ்கர் அலி அறிமுகமாகும் 'ஹனி பீ 2.5', மற்றும் புதுமுகங்கள் நடித்த்துள்ள 'மண்ணாம்கட்டையும் கரியிலையும்' என ஏழு மலையாள படங்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்ல, தமிழ்ப்படமான தரமணியும் இந்த வாரம் மலையாளத்தில் வெளியாகியுள்ளது..
தரமணி தவிர்த்து மேலே சொன்ன ஏழு படங்களும் மிகச்சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள்.. இந்த வாரம் ரிலீஸ் செய்தே ஆகவேண்டிய சூழலில் இருந்தவை. அடுத்தவாரம் அஜித்தின் விவேகம் படம் 309 தியேட்டர்களில் ரிலீசாவதாலும், அதை தொடர்ந்து அதற்கடுத்த வாரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக மிகப்பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதாலும் வேறுவழியின்றி இன்றே ரிலீசாகியுள்ளன. இந்த ஆறு நாட்கள் தான் இன்று வெளியாகியுள்ள இந்த சிறிய படங்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யப்போகின்றன.