டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
மலையாள முன்னணி நடிகரான பகத் பாசில் வேலைக்காரன் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். ஆரண்ய காண்டம் தியாகராஜன் குமாராராஜா படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறுகிறார் பகத் பாசில். அவர் மேலும் கூறியதாவது:
மலையாளத்தில் மட்டும் நடிக்க வேண்டும் என்று உறுதியோடு இருந்தேன். காரணம் மொழி பிரச்சினை. ஆனால் இயக்குனர் மோகன்ராஜா கேரளா வரையும் வந்து என்னிடம் கதை சொல்லி இம்ப்ரஸ் பண்ணினார். ஒரு நல்ல ப்ராஜக்டை மிஸ் பண்ண வேண்டாமுன்னு நானும் கிளம்பி வந்துட்டேன். நல்லதுக்கும், கெட்டதுக்குமான போராட்டம்தான் கதை. இதுல நான் நல்லவனா கெட்டவனா என்பதை இப்போது சொல்ல முடியாது.
ஆரம்பத்துல தமிழ்ல பேசுறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டேன். சிவகார்த்தியேன்தான் உதவி பண்ணினார். இப்போது அவர் எனது நெருக்கமான நண்பராகி விட்டார். அப்பா படத்தில் நடிக்கிற காலத்திலிருந்து நயன்தாராவை தெரியும். ஆனால் இப்போதுதான் அவருடன் சேர்ந்து நடிக்கிறேன்.
தமிழ் சினிமாக்கள் நிறைய பார்க்கிறேன். விசாரணை படம் என்னை மிரள வைத்த படம். நல்ல திறமைசாலிகள் சினிமாவுக்கு வர்றாங்க. புதுசு புதுசா எதையாவது செய்து ஆச்சர்யப்படுத்துறாங்க. அவர்களோடு நானும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். அதை நான் நடிக்கிற படத்தின் வெற்றிகள் தான் தீர்மானிக்கும். என்றார்.