தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1975ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி வெளியான 'அபூர்வ ராகங்கள்' படம் வெளிவந்த போது அந்தப் படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த் தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். பெங்களூருவிலிருந்து நடிகனாக வேண்டும் என்ற ஆசையில், சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்புப் பயிற்சி பெற்று, பாலசந்தர் பார்வையில் பட்டு 'அபூர்வ ராகங்கள்' படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் முக்கியக் கதாபாத்திரத்தில் அறிமுகமானார் ரஜினிகாந்த்.
அடுத்த ஐந்து வருடங்களில் வில்லன் கதாபாத்திரம் உட்பட பல விதமான கதாபாத்திரங்களில் நடித்தவர் 1980களில் தனிப் பெரும் வசூல் ஹீரோவாக உயர்ந்து நின்றார். அப்போது ஆரம்பமான அவரது வசூல் சாம்ராஜ்யம் இத்தனை வருடங்கள் கழித்தும் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இடையில் சில வருடங்கள் 2010 முதல் 2014 வரை உடல்நிலை காரணமாக நடிக்காமல் இருந்தால் கூட, என்றும் மாறாத ரசிகர்களின் அன்பையும், அவருக்கே உண்டான வசூல் சாதனையையும் படைத்தார்.
திரையுலகத்தில் 42 வருடப் பயணம் என்பது சாதாரண விஷயமல்ல. எம்ஜிஆர், கமல்ஹாசன் ஆகியோரின் திரையுலகப் பயணம் புகழ் பெற்ற நீண்ட நெடியது என்றாலும் ரஜினிகாந்தின் திரையுலகப் பாதை அவர்களுடன் ஒப்பிட முடியாத தனி பாதை எனத் தாரளமாகச் சொல்லலாம்.
இப்போதும் 'காலா' படத்தில் தன்னுடைய காந்தமான நடிப்பை வெளிப்படுத்திக் கொண்டு நடித்துக் கொண்டிருக்கிறார். எவ்வளவோ நட்சத்திரங்கள் இந்தத் திரையுலகத்தில் இருந்தாலும் ஒரு சிலரை மட்டும்தான் ரசிகர்கள் காலம் கடந்தும் கொண்டாடுவார்கள், அவர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர்.