ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மதுரையில் நடந்த பில்லா பாண்டி படப்பிடிப்பில் பேட்டா பிரச்னையில் டெக்னீஷியன் சங்க நிர்வாகிகள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இதனால் கோபம் அடைந்த தயாரிப்பாளர் சங்கம், தயாரிப்பாளர்கள் யாரை வைத்து வேண்டுமானாலும் வேலை பார்க்கலாம் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து பெப்சி வேலை நிறுத்தம் அறிவித்தது, பின்னர் வாபஸ் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையில் பிரச்னைக்கு காரணமான டெக்னீஷியன்கள் யூனியனை பெப்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து கடிதம் அனுப்பியது பெப்சி. இது டெக்னீஷியன்கள் நிர்வாகிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வருகிற 20ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அவசர பொதுக்குழுவை கூட்டியுள்ளது. இந்த பொதுக்குழு வடபழனி துர்கா நர்சரி பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கிறது.
இது தொடர்பான தனது நிர்வாகிகளுக்கு டெக்னீஷியன் யூனியன் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:
கடந்த 16ந் தேதியன்று பெப்சியிலிருந்து நமது சங்கத்துக்கு கடிதம் வந்தது. டெக்னீஷியன் யூனியனை பெப்சியிலிருந்து நீக்குவதாக அந்த கடிதம் தெரிவிக்கிறது. இதற்கு பெப்சி குறிப்பிட்டிருக்கும் காரணம் முற்றிலும் தவறானதாகும். நமது சங்கத்தின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது, உறுப்பினர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். செயற்குழுவில் சிறப்பு விருந்தினர்களை மட்டும் வைத்துக் கொண்டு பெப்சி இந்த முடிவை எடுத்துள்ளது. இது தவறானதாகும்.
பொதுக்குழுவை கூட்டி நமது சங்கத்தின் விளக்கத்தை கேட்காமல் எடுக்கப்பட்ட முடிவு. எனவே இது தொடர்பாக முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டியதிருப்பதால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதை தவிர்த்து விட்டு அனைத்து உறுப்பினர்களும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.