ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
‛பிக்பாஸிலிருந்து வெளியே வந்த நடிகை ஓவியா, என் காதல் உண்மையானது; என்னை யாரும் ரோல் மாடலாக பின்பற்ற வேண்டாம்' என, மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து ஓவியா நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது:
பிக்பாஸிலிருந்து வெளியே வந்ததும், சுற்றுலா சென்று விட்டேன். இப்போது தான் பிக்பாஸ் தொடர்பான வீடியோக்களை பார்த்தேன். எனக்கு இவ்வளவு வரவேற்பு இருந்ததை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி. எனக்கு மனதளவில் சற்று பிரச்சனை இருந்தது. அனைத்தும் சரியாகி விட்டது. பிக்பாஸிலிருந்து ஜூலி, சக்தி உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம். அப்படி செய்து எனக்கு சாபத்தை ஏற்படுத்தி விடாதீர்கள். தவறு செய்யாத மனிதன் எங்கு இருக்கிறான். அரசே தவறு செய்யும் போது, நாமெல்லாம் எப்படி. மற்றவர்களை வேதனைப்படுத்தும் ரசிகர்கள் எனக்கு வேண்டவே வேண்டாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் இனி போக மாட்டேன். தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். எனக்காக யாரும் படத்தை பார்க்க வேண்டாம். கதை பிடித்திருந்தால் பாருங்கள்; பிடிக்கவில்லை என்றால் கேவலமாக கூட திட்டலாம்.
என் காதல் உண்மையானது. அதை வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. என் தலை முடியை வெட்டியதை பார்த்து பலர் சிகிச்சை ஏதும் எடுத்தீர்களா என கேட்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. ‛விக்' தயாரிப்பு நிறுவனம் ஒன்று என்னை அணுகி, புற்றுநோயாளிகளுக்காக ‛விக்' தயாரிக்கிறோம். தலைமுடி தானம் கேட்டார்கள். தலைமுடி போனால் எல்லாம் போய்விடாது. தலைமுடியில் ஒன்றுமே இல்லை. அதை உணர்த்தவே என் முடியை வெட்டி விட்டேன். பலர் என்னை முன்மாதிரியாக எடுத்துள்ளதாக கூறுகின்றனர். அப்படியெல்லாம் செய்யாதீர்கள் அந்தளவுக்கு தகுதியான நபர் நான் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.