மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நான்கு படங்களே நடித்தாலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இடம்பிடித்தவர் நஸ்ரியா. திருமணத்திற்குப்பின் நடிப்பை விட்டு முழுவதுமாக ஒதுங்கிவிட்டார். இருந்தாலும் 'புலி வருது, புலி வருது கதையாக நஸ்ரியா திரும்பவும் நடிக்க வருகிறார் என கடந்த ஒரு வருட காலமாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றனவே தவிர, அவர் நடிக்க வந்தபாட்டை காணோம்.. இத்தனைக்கும் நஸ்ரியா மீண்டும் நடிப்பதற்கு அவரது கணவர் பஹத் பாசிலும் பச்சைக்கொடி காட்டிவிட்டார். ஆனாலும் அவர் மீண்டும் நடிக்க வரும் செய்தி கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்து வந்தது..
இந்தநிலையில் நஸ்ரியாவை மீண்டும் நடிக்க அழைத்து வரும் வேலையை 'பெங்களூர் டேய்ஸ்' இயக்குனர் அஞ்சலி மேனன் மேற்கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. நஸ்ரியாவின் மிகச்சிறந்த படங்களை பட்டியலிட்டால் அதில் 'பெங்களூர் டேய்ஸ்' படம் தான் முதலிடம் பிடிக்கும். அதனால் மீண்டும் அஞ்சலி மேனன் படத்தில் நடிக்க வேண்டும், அதிலும் பிருத்விராஜ் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதால் நஸ்ரியா இந்தப்பட வாய்ப்பை உறுதியாக ஏற்றுக்கொள்வார் என்றே சொல்லப்படுகிறது.