ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கற்றது தமிழ் படத்தை அடுத்து ராம் இயக்கத்தில் வெளியான படம் தங்க மீன்கள். அந்த படம் 3 வருடங்கள் 9 மாதம் கழித்துதான் திரைக்கு வந்தது. அதேபோல் அதையடுத்து ராம் இயக்கி சமீபத்தில் திரைக்கு வந்துள்ள தரமணி படமும் வருடக்கணக்கில் தாமதம் ஆனது. அந்த வகையில், இந்த படம் 3 வருடங்கள் 8 மாதங்களுக்கு பிறகுதான் திரைக்கு வந்திருப்பதாக சொல்கிறார் ராம்.
இந்த படத்தை தயாரித்த ஜே.எஸ்.கே.சதீஷ், சில படங்களை தயாரித்து சிக்கலில் இருந்தார். அதனால் தான் இவ்வளவு தாமதம். அவரது சூழ்நிலையைப் பார்த்து அவரை எதுவும் சொல்ல முடியவில்லை. அதனால் தான் தரமணியை மறந்து விட்டு மம்மூட்டியை வைத்து பேரன்பு படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினேன் என்கிறார் டைரக்டர் ராம்.
மேலும், இப்படி தரமணி படம் தாமதமானதால் அந்த காலகட்டத்தில் வெளியான சில படங்களைக்கண்டு ரொம்பவே பயந்தேன். முக்கியமாக மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் வெளியானபோது என் பட சாயலில் கதை இருந்து விடுமோ என்கிற பயத்தில் தியேட்டருக்கு சென்று பார்த்தேன். இப்படி வேறு சில படங்களையும் பயத்துடனேயே தியேட்டருக்கு சென்று பார்த்தேன்.
ஆனால் நல்ல வேலையாக தரமணி சாயலில் எந்த படத்தின் கதையும் இல்லாதது மனதுக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவேளை அப்படி எந்த படமாவது வந்திருந்தால் இந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றிருக்காது என்கிறார் ராம்.