டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் அடாவடி தொடர்ந்து வருகிறது. நிகழ்ச்சி ஒன்றில் செல்பி எடுக்க முயன்ற ரசிகரை பளார் என கன்னத்தில் அறைந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் எம்எல்ஏ.,வாகவும் உள்ளார். 100 படங்களை தாண்டி இப்போது கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 102-வது படத்தில் நடித்து வருகிறார். பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
இந்நிலையில் ஐதராபாத்தை அடுத்த நந்தியால் என்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இதுதொடர்பான நிகழ்ச்சிக்கு பாலகிருஷ்ணா அங்கு சென்றிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க முயன்றார். இதில் கோபமான அவர், அந்த ரசிகரை பளார் என்று கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் இணையதளங்களில் வைராகி வருகிறது.
ஏற்கனவே படப்பிடிப்பில் தனது உதவியாளரை ஷூவை கழற்ற சொல்லி அடித்தது, அதற்கும் முன்னர் ஒரு நிகழ்ச்சியில் ரசிகரை அறைந்தது என பாலகிருஷ்ணாவின் அடாவடி தொடர்ந்து வருகிறது.
நடிகராக மட்டுமல்லாது எம்.எல்.ஏ.,வாகவும் இருப்பதால் பாலகிருஷ்ணாவின் இந்த செயலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.