தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ் நடிகர்கள் தெலுங்கில் படங்களை வெளியிடுவதும், தெலுங்கு நடிகர்கள் தமிழில் படங்களை வெளியிடுவதும் அந்தக் காலத்தைப் போல இப்போது மீண்டும் நெருங்கி வந்துவிட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிப் படங்களும் மாறி மாறி டப்பிங் ஆகி வெளிவந்து கொண்டிருக்கின்றன. 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ்நாட்டில் பெரிய வெற்றி பெற்றதால் மற்ற தெலுங்கு நடிகர்களும் தமிழில் நேரடியாக அறிமுகமாக விரும்பியுள்ளனர்.
அவர்களில் தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படுபவர் மகேஷ் பாபு. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஸ்பைடர்' படத்தின் மூலம் மகேஷ் பாபு தமிழில் நேரடியாக அறிமுகமாக உள்ளார். மகேஷ் பாபு இதற்கு முன் நடித்த பல தெலுங்குப் படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வெளியாகியுள்ளன. அவர் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'செல்வந்தன்' டப்பிங் படத்திற்காக சென்னையில் நடைபெற்ற விழாவிலும் மகேஷ் பாபு கலந்து கொண்டார். இருந்தாலும் அவையெல்லாம் டப்பிங் படங்கள்.
சென்னையில் பிறந்து வளர்ந்து, லயோலா கல்லூரியில் படிப்பை முடித்த மகேஷ் பாபு, தமிழில் நேரடியாக அறிமுகமாகும் படம் 'ஸ்பைடர்' என்பதால் மகேஷ் பாபுவை தமிழ்த் திரையுலகிற்கு வரவேற்கும் விதத்தில் செப்டம்பர் 9ம் தேதியன்று பிரம்மாண்டமான விழா ஒன்றை நடத்த உள்ளார்களாம். அதில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு நெருக்கமான ஹீரோக்களும், பல திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இது பற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.