மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நடிகர் ரஜினிகாந்த்தின் ஆஷ்ரமம் பள்ளி, சென்னை கிண்டியில் செயல்பட்டு வருகிறது. இதை ரஜினியின் மனைவி லதா நிர்வகித்து வருகிறார். வாடகை இடத்தில் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பல மாதங்களாக வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறி, இந்த நிலத்தின் உரிமையாளர் பள்ளியை இழுத்து மூடியுள்ளார். ஆனால் இதை நம்ப வேண்டாம் என்று ரஜினி தரப்பில் கூறப்பட்ட நிலையில், ரஜினி சார்பில் பள்ளியின் முதல்வர் மற்றும் லதா ரஜினியின் வக்கில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய வக்கில் ரவிச்சந்திரன், பள்ளி நிர்வாகத்தின் மீது நில உரிமையாளர் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். மாதம் மாதம் வாடகை தரப்பட்டு வரும் நிலையில் நிர்வாகத்தை இழிவுப்படுத்த இந்த மாதிரி செய்திகளை பரப்பி வருகிறார். நிச்சயம் அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களின் கல்வி எந்தவிதத்திலும் பாதிக்காது, மாற்று இடத்தில் செயல்படும் என்றார்.