ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |
கடந்த ஏப்ரல் மாதம் மறைந்தவர் பாலிவுட்டின் பிரபல நடிகரான வினோத் கண்ணா. இவரது மகன் அக்ஷ்ய் கண்ணா. இவரும் பாலிவுட்டில் நடிகராக உள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அக்ஷ்ய் கண்ணா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடத்தில் தந்தையின் வாழ்க்கை படமாக உருவாகுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அக்ஷ்ய். "தந்தையின் வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுப்பது பற்றி நான் யோசிக்கவே இல்லை, தற்போதைக்கு அப்படி ஒரு எண்ணமும் இல்லை. ஒருவேளை என் அப்பாவிற்கு ஏற்றமாதிரி ஒரு ஹீரோ கிடைத்தால் அது பற்றி யோசிப்பேன். ஒருவரின் வாழ்க்கையை படமாக எடுப்பது அவ்வளவு எளிதல்ல. அதிலும் அந்த நடிகர், அவரைப்போன்று நடிப்பது சாதாரண விஷயமல்ல" என்று கூறியிருக்கிறார்.
தற்போது அக்ஷ்ய் கண்ணா, ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியான இத்திபா ரீ-மேக்கில் நடித்து வருகிறார்.