தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிவகார்த்திகேயனுடன் ரஜினிமுருகன், ரெமோ படங்களில் நடித்ததை அடுத்து விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அதையடுத்து தற்போது சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்கிறார். அதேபோல் தெலுங்கில் நானி, பவன் கல்யாணுடன் நடித்து வருபவர், மகாநதி படத்திலும் லீடு ரோலில் நடிக்கிறார்.
இந்த நிலையில், பைரவாவில் விஜய்யுடன் நடிப்பது வரை ஹீரோக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை செலக்ட் பண்ணி வந்த கீர்த்தி சுரேஷ், இப்போது ஹீரோக்களின் படம் என்பதை விட கதைக்கும், கதாபாத்திரத்திற்க்குமே முக்கியத்துவம் கொடுக்கிறாராம்.
அவரிடத்தில் அஜித்துடன் நடிப்பதற்கான முயற்சி நடக்கிறதா? என்று கேட்டால், அஜித் எனக்கு பிடித்தமான நடிகர். அவருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என்றாலும், தனிப்பட்ட முறையில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வாய்ப்பு வரும்போது தானாக வரும். அதனால் வருகிற படங்களில் நல்லதாக செலக்ட் பண்ணி நடித்து வருகிறேன். இந்தந்த ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்பது எனது டார்க்கெட் இல்லை என்கிறார் கீர்த்தி சுரேஷ்.