'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
கடந்த வாரம் வெள்ளியன்று வெளியான தரமணி படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஆண்ட்ரியா. ஐடி பீல்டில் பணியாற்றும் பெண்ணாக, ஒரு பையனுக்கு அம்மாவாக நடித்திருந்தார். அதோடு, சில காட்சிகளில் சரக்கடிப்பது, சிகரெட் பிடிப்பது என துணிச்சலாக நடித்திருந்தார்.
இதுபற்றி ஆண்ட்ரியா கூறுகையில், என்னைப் பொறுத்தவரை கதாபாத்திரம் பிடித்திருந்தால் இமேஜ் பார்க்காமல் நடிப்பேன். அந்த வகையில் தரமணி படத்தின் கதை எனக்கு பிடித்திருந்தது. அதனால் தான் அந்த கேரக்டர் சரக்கு அடிக்க வேண்டும், சிகரெட் படிக்க வேண்டும் என்று டைரக்டர் சொன்னபோது அந்த கதாபாத்திரத்திற்காக அப்படி நடித்தேன். அதனால் அதுகுறித்து விமர்சனங்கள் செய்தாலும் எனக்கு கவலையில்லை.
தரமணி படத்தைத் தொடர்ந்து துப்பறிவாளன், வடசென்னை படங்களில் நடிக்கிறேன். இந்த படங்களிலும் எனக்கு வித்தியாசமான வேடங்கள் தான். வழக்கமான வேடங்களாக இல்லாமல் மாறுபட்ட பர்பாமென்ஸ் கொண்ட வேடங்கள். முக்கியமாக வட சென்னையில் மாறுபட்ட கதாபாத்திரம். ஆண்ட்ரியாவா இது என்று ஆச்சர்யப்படுவார்கள். அப்படியொரு வேடத்தில் நடிக்கிறேன். இதுபோன்ற மாறுபட்ட வேடங்களில் சினிமாவில் தொடரவே ஆசைப்படுகிறேன் என்கிறார் ஆண்ட்ரியா.