Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே படத்தில் 2 மகன்களை ஹீரோவாக்கிய தயாரிப்பாளர்

16 ஆக, 2017 - 11:31 IST
எழுத்தின் அளவு:
Producer-debut-his-two-sons-as-a-hero-in-a-movie

சூப்பர் குட் பிலிம்சில் 25 வருடத்திற்கும் மேலாக தயாரிப்பு நிர்வாகியாக இருந்தவர் பாபுராஜா. சத்ரபதி, அரசு என்ற இரண்டு படங்களையும் தயாரித்தார். அதன் பிறகு கபாலி உள்பட பல படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாக இருந்தார்.

தற்போது பாபுராஜா திருப்பதிசாமி குடும்பம் என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் தனது மகன்கள் ஜே.கே, ஜெயகாந்த் இருவரையும் ஹீரோக்களாக அறிமுகப்படுத்துகிறார். இருவரும் படத்தில் அண்ணன், தம்பியாக நடிக்கிறார்கள். ஐஸ்வர்யலட்சுமி என்ற புதுமுகம் ஹீரோயின். இவர்கள் தவிர தேவதர்ஷினி, மயில்சாமி, முத்துராமன் உள்பட பலர் நடிக்கிறார்கள்., ஒய்.எம்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார், சாம் டி.ராஜ் இசை அமைக்கிறார் இதுகுறித்து பாபுராஜா கூறியதாவது:

இந்த படம் வித்தியாசமான கதைக்களம் கொண்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்ப படமாகவும், ஜனரஞ்சகமான படமாகவும் இருக்கும். நாம் நமது வீட்டுக்கு பக்கத்தில், எதிரில் பார்க்கிற சராசரி அப்பா தான் திருப்பதிசாமி. பக்கத்து வீட்டில் எதிர் வீட்டில் ஒரு பிரச்சனை என்றால் ஓடிப் போய் உதவி செய்யும் குணம். அன்புள்ளம் கொண்ட அமைதியான மனைவி, மகன்கள் மகள் என நேர்மையாக வாழும் குடும்பம். அப்படிப்பட்ட அவர்களுக்கு அதிகார பலம் கொண்ட ஒருவனது அடாவடியால் ஏற்படும் பிரச்னை. ஆள்பலம், அதிகார பலம் கொண்ட அவனையும், அவனது அராஜகத்துக்கு துணை போகும் அரசியல்வாதியையும் மூளை பலத்தால் திருப்பதிசாமியின் மகன்களான இருவரும் எப்படி வெல்கிறார்கள் என்பது தான் கதை.

திருப்பதிசாமியாக ஜெயன் நடித்துள்ளார். அவரது மகன்களாக எனது மகன்கள் ஜே.கே ஜெயகாந்த் நடித்திருக்கிறார்கள். மகன்கள் என்பதற்காக கதையை மீறி எதையும் திணிக்கவில்லை. கதைக்குண்டான கதாபாத்திரங்களாகத் தான் வருகிறார்கள் என்றார் பாபுராஜா.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in