பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் - சிம்ரன் நடித்த உதயா, மாதவன் - ஜோதிகா நடித்த டும் டும் டும் படங்களை இயக்கியவர் அழகம் பெருமாள். அதன்பிறகு முழு நேர நடிகர் ஆனார். அப்பா, சித்தப்பா, அண்ணன் கேரக்டரில் நடித்தவர் வேலூர் மாவட்டம் என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அதன் பிறகு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது தரமணி படத்தில் ரயில் நிலைய கான்ஸ்டபிளாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் அவர், மீண்டும் படம் இயக்குவேன் என்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
ரொம்ப நாளைக்கு பிறகு தரமணி திரைப்படத்தில் நான் நடித்துள்ள பரண்பாஸ் கதாபாத்திரம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பொறுத்தவரை இயக்குநர் ராம் ஒவ்வொரு காட்சிகளுக்கும் 4 நடிகர்களை நடிக்க வைத்து கருத்து சொல்லுற மாதிரி நீளமான காட்சியாக இல்லாமல், போகிறபோக்கில் நம் மனதை தொடுகிற மாதிரி சொல்லிட்டு போறது, எனக்கும், படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
7 படங்களில் புதியதலைமுறை இளம் இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன். இயக்குநர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் “புதுப்பேட்டை 2“ பண்ணுகிற முயற்சியில் இருக்கிறார்கள், அது நடந்தால் எனக்கும் அதில் முக்கிய ரோல் இருக்கும் என்று நினைக்கிறன். ஜி.வி.பிரகாஷ் உடன் ஒரு படம் போயிட்டு இருக்கு. எல்லாவித கேரக்டரும் பண்ணுகிறேன். இப்படி தான் நடிப்பேன், அப்படித்தான் நடிப்பேன் என்று இல்லாமல் எந்த கதாபத்திரத்தில் நடித்தாலும் அதில் நம் விஷயத்தை சரியாக பண்ணனும் என்பது என்னுடைய விருப்பம்.
நிறைய பபடங்களில் நடித்தேன் , அந்த படங்கள் நன்றாக அமைந்தும் மக்களிடம் அது சரியாக போய் சேரவில்லை . எனக்கான அங்கீகாரம் பெரிதாக கிடைக்கவில்லை. இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. மீண்டும் எப்போது படம் இயக்குவீர்கள் என்று கேட்கிறார்கள். இவ்வளவு நாள் படம் இயக்காமல் கேப் விழுந்துவிட்டது. அதற்கு எல்லாம் பதில் சொல்லும் வகையில் நல்ல கதையோடு ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன் என்றார் அழகம் பெருமாள்.