ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழக அரசியல் களம் தான் இன்றைக்கு சூடு பிடிக்கும் களமாக மாறியிருக்கிறது. நடிகர் கமல்ஹாசன், தமிழக அரசு மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக கூறி வருகிறார். தமிழக அரசியல் களமட்டுமல்லாது பல்வேறு விஷயங்களையும் முன் எடுத்து வைக்கிறார். அந்தவகையில் தினம் ஒரு பரபரப்பான செய்திகளை தருகிறவர் இப்போதைக்கு கமல் தான் என்றாகிவிட்டது. அப்படி நடிகர் கமல்ஹாசன் இப்போது டுவிட்டரில் தமிழக முதல்வரை பதவி விலக சொல்லி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... "ஒரு மாநிலத்தில் பெரும் விபத்துகள், ஊழல்களுக்காக சம்பந்தப்பட்ட முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் என்றால், தமிழகத்தில் இவ்வளவு ஊழல்கள் நடந்தும், முதல்வரை பதவி விலக சொல்லி எதிர்க்கட்சியினர் ஒருவர் கேட்காதது ஏன்" என்று கூறியிருக்கிறார். அதாவது முதல்வர் பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மறைமுகமாக கூறியுள்ளார்.
மற்றொரு டுவீட்டில்.... "என்னுடைய இலக்கு தமிழகத்தின் முன்னேற்றமே. என் குரலுக்கு வலு சேர்க்க யாருக்கு தைரியம் உள்ளது. திமுக., அதிமுக., போன்ற கட்சிகள் ஒரு கருவி மட்டுமே. ஒருவேளை கருவி மழுங்கிவிட்டால் வேறு ஒன்றை தேட வேண்டியது தான்".
தொடர்ந்து மற்றுமொரு டுவீட்டில்... "சுதந்திரம் ஊழலலிருந்து நாம் பெறாத வரையில் இன்றும் நாம் அடிமைகளே. புதிய சுதந்திரப் போராட்டத்திற்கு சூளுரைக்கத் துணிவுள்ளவர் வாரும், வெல்வோம்" என்று கூறியிருக்கிறார்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.