டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
போகன் படத்திற்கு பிறகு ஹன்சிகாவின் மார்க்கெட் டவுனாகிவிட்டது. அதனால் மலையாளத்தில் மோகன்லாலின் வில்லன் படத்தில் நடித்தார். அதையடுத்து பிரபுதேவா கொடுத்த ஆதரவில் குலேபகாவலி படத்தில் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் சுந்தர்.சியின் இயக்கத்தில் சில படங்களில் நடித்தவர் என்பதால் சங்கமித்ராவில் ஹன்சிகா நடிக்க வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், நயன்தாரா, திரிஷா, தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் மேல்தட்டு ஹீரோக்களுடனான வாய்ப்புகள் குறைந்து விட்டதை அடுத்து வளர்ந்து வரும் நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து வருகிறார்கள். ஆனால், அந்த மாதிரி வாய்ப்பு ஹன்சிகாவை தேடிச்சென்றபோது நடிக்க மறுத்து விட்டாராம். சிறிய வேடங்கள் என்றாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டுமே நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம், சங்கமித்ரா படம் மீது இன்னமும் ஹன்சிகாவுக்கு நம்பிக்கை இருக்கிறதாம். குலேபகாவலி வெற்றியடைந்தால் அதன்பிறகு தன்னை அந்த படத்திற்கு ஒப்பந்தம் செய்வார்கள் என்கிற நம்பிக்கையுடன் காணப்படுகிறாராம்.