மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் |
அரசியல் பிரவேசத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடித்த படம் கைதி எண் 150. அதையடுத்து பல கதைகளை கேட்டு வந்த அவர், ஆந்திராவைச்சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் கதையை தற்போது ஓகே பண்ணி வைத்திருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது.
அதனால் படத்தில் இந்திய அளவில் ரசிகர்களுக்கு பரிட்சயமான நடிகர்- நடிகைகள் இருக்க வேண்டும் என்பதற்காக, ஒரு முக்கிய வேடத்தில் அமிதாப்பச்சனை நடிக்க வைக்கிறார் சிரஞ்சீவி. மேலும், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா இருவரும் கதாநாயகிகளாக நடிக்க, நான் ஈ சுதீப் வில்லனாக நடிக்கிறாராம்.
மேலும், இந்த படத்தின் பிரீ புரொடக்சன்ஸ் வேலைகள் நடந்து வரும் நிலையில், சிரஞ்சீவியின் பிறந்த நாளான ஆகஸ்ட் 22-ந்தேதி அன்று படத்தின் தலைப்புடன் கூடிய லோகோ வெளியாக இருப்பதாக படத்தின் டைரக்டர் சுரேந்தர் ரெட்டி அறிவித்துள்ளார். இந்த படத்தை சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரண் தயாரிக்கிறார்.