சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
பரபரப்பான செய்திகளை தருகிறவர் இப்போதைக்கு கமல் தான். இதன் ஒரு பகுதியாக என் மகள்களை கடத்த திட்டமிட்டனர் என்ற புதிய தகவலை வெளியிட்டுள்ளார். தனக்கு பிடித்த 70 படங்களின் பட்டியலை ஆங்கில இதழ் ஒன்றில் பட்டியலிட்டுள்ளார். அந்த படங்கள் தொடர்பான தனது எண்ணங்கள், அனுபவங்கள், கருத்துக்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த 70 படங்களின் பட்டியலில் கமல், சுகன்யா நடித்த மகாநதி பற்றியும் குறிபிட்டுள்ளார். அந்தப் படத்தின் கதையை எழுதியவர் கமல். இதுபற்றி அவர் குறிப்பிடும்போது. "மகாநதி கதையை நான் எப்படி எழுதினேன் என்பது பற்றி இதுவரை யாரிடமும் பகிர்ந்து கொண்டதில்லை, இப்போது மகள்கள் வளர்ந்து எதையும் புரிந்து கொள்ளும் பக்குவம் ஏற்பட்டு விட்டதால் சொல்கிறேன்.
ஒரு முறை என் வீட்டில் வேலை பார்ப்பவர்கள் சேர்ந்து வெளியாட்களுடன் என் மகள்களை கடத்தி என்னிடம் பணம் பறிக்க திட்டமிட்டனர். அவர்களின் சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் மூலம் இதனை நான் கண்டுபிடித்து விட்டேன். அவர்களை கொலை செய்யும் அளவிற்கு ஆத்திரம் கொண்டேன். பின்பு அந்த உணர்ச்சியை கட்டுப்படுத்திக் கொண்டு அன்றைக்கு அந்த நிலைமையை சமாளித்தேன். பின்னர் ஒரு கதை எழுதலாம் என்று உட்கார்ந்த போது இந்த சம்பவம் நினைவுக்கு வந்து மகாநதி கதையை எழுதினேன். மற்றவர்களுக்கும் இது நடந்து விடலாம் என்கிற பயத்திலும் எழுதினேன்.
இவ்வாறு கமல் அதில் குறிப்பிட்டுள்ளார்.