திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
மலையாளத்தில் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் பிரபல முன்னணி நடிகர் திலீப் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் முக்கியமானர் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்ட பல்சர் சுனில். இவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே திலீப் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கிய வழக்கில் பல்சர் சுனிலை நேற்று திருவனந்தபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த பல்சர் சுனில் அங்கு நின்று கொண்டிருந்த நிருபர்களை நோக்கி "கடத்தல் வழக்கில் மேடத்திற்கும் தொடர்பு உண்டு என்று நான் கூறியது பொய்யல்ல. போலீஸ் விசாரணையில் அது தெரியும். அப்படி போலீசார் கண்டுபிடிக்காவிட்டால் நானே அவர் பெயரை அடுத்த முறை கோர்ட்டுக்கு வரும்போது சொல்வேன். அவர் ஒரு பிரபலமான நடிகை என்பதை மட்டும் இப்போது சொல்கிறேன்" என்று சத்தமாக கூறியபடியே சென்றான்.