இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
டுவிட்டரில் ஆக்ட்டிவாக இருக்கும் சினிமா பிரபலங்கள் பலர் சமீபகாலமாக அதை விட்டு விலகுவது அதிகரித்து வருகிறது. விஷால், குஷ்பு ஆகியோரை தொடர்ந்து நடிகர் சிம்புவும் டுவிட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது... " எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே
ஆதிக்கம் செலுத்துகின்றன. எனவே டுவிட்டரில் இருக்க எனக்கு பயமாக இருக்கிறது.
ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம் தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்". இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.
சிம்பு வெளியிட்டுள்ள மற்றுமொரு ஆடியோவில் கூறியிருப்பதாவது.... யார் எது செய்தாலும் அது தவறு, அதில் ஒரு குறை, கெட்ட வார்த்தைகள் உபயோகிப்பது. ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்ற பெயரில் இஷ்டத்திற்கு ஏதாவது சொல்கிறார்கள். தவறான விஷயங்களை சம்பந்தமான விஷயங்களை பெரிதுப்படுத்துகிறார்கள். போலியான செய்திகள், போலியான தகவல்கள்.... என கண்ணுக்கு நேராக பல தவறான விஷயங்கள் நடப்பது ஒரு சினிமாக்காரனாக எனக்கு தெரிகிறது.
ஆனால் மக்கள் கண்டிப்பாக ஒருநாள் முழித்து கொள்வார்கள். எவ்வளவு நாள் தான் தூங்குவது போன்று நடிப்பார்கள். நிறைய பேர் காசு கொடுத்து செய்வது எல்லாம் எனக்கு தெரியும். நிறைய பேர் மேல் பழிபோடுவார்கள். ஆகையால் அனைவரும் கவனமாக இருங்கள். அடுத்தவரை அவமானப்படுத்தி அதில் சந்தோஷமடைய வேண்டும் என்று எண்ணம் கொள்ளாதீர்கள்.
சின்ன நடிகர்களில் இருந்த சூப்பர் ஸ்டார் வரை தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பல கலைஞர்களின் படங்களுக்கு வாழ்த்து சொல்லுவது போன்று ஆதரவு தான் கொடுத்து வருகிறேன். ஆனால் இப்போது அது செய்ய முடியாமல் போவது வருத்தம். அதோடு ரசிகர்களுடனும் கலந்துரையாடுவது மிஸ்ஸாவது வருத்தமாக உள்ளது. இருந்தாலும் டுவிட்டர் தேவையில்லை என்றே தோன்றுகிறது. எல்லோரும் மற்றவரிடத்தில் அன்பை செலுத்துங்கள். அன்புக்கு மேல் வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு சிம்பு கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடிகை ஓவியா விஷயத்தில் அவர் ரொம்பவே அப்செட் ஆனார். அவருடைய போலி டுவிட்டர் அக்கவுண்ட்டில் இருந்து ஓவியாவை திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக சிம்பு மிகவும் காட்டமான விளக்கத்தை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.