பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை சமந்தாவிற்கும், நடிகர் நாக சைதன்யாவிற்கும் அக்டோபர் மாதம் 6ம் தேதி கோவில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து, கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. நான்கு நாட்களுக்கு அந்த ரிசார்ட்டில் உள்ள அறைகள் முழுவதும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நாயகியாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கும் சமந்தா, திருமணத்திற்கப் பின்னும் நடிக்க உள்ளார்.
சமீபத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த சமந்தா, நாகசைதன்யாவுடனான காதலைப் பற்றி வெளிப்படையாகப் பேசியுள்ளார். “ஏ மாய சேசவே' படத்திற்காக அவரை முதன் முதலில் சந்தித்த போதே எனக்குள் காதல் வந்துவிட்டது. தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் அன்பாகவே பழகி வந்தோம். அவரை விட இப்போதைக்கு என் வாழ்வில் வேறு எதுவும் பெரிதில்லை.
மனதளவில் எனக்கு எப்போதோ திருமணமாகிவிட்டது. 30வது வயதில் திருமணமாகும் என்று முன்னரே நினைத்திருந்தேன், அது இப்போது நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு என் குணமும் மாறாது. திருமணமாகிப் போக இருக்கும் குடும்பத்தினரும் நான் நானாக இருக்க அனுமதி அளித்துள்ளனர். அது மிகவும் அழகானது,” எனத் தெரிவித்துள்ளார்.
சமந்தாவின் அடுத்த தமிழ்ப் படமாக விஜய்யுடன் நடித்துள்ள 'மெர்சல்' படம் வெளிவர உள்ளது.