இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தனது சித்தியின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வந்தபின் தனது மார்க்கெட் ஓஹோவென உயரும் என எதிர்பார்த்தார் அஞ்சலி. ஆனால் அவருக்கு பப்ளிசிட்டி கிடைத்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரே ஒரு குத்துப்பாடலுக்கு கூட ஆட்டும் நிலைக்கு இறங்கி வந்தார் அஞ்சலி. இடையில் நடிகருடனான காதல் பந்தம் வேறு அவரை கட்டிபோட்டுவிட்டது. இதோ நீண்ட நாளைக்குப்பின் இப்போதுதான் 'தரமணி'யில் லேசாக தலை காட்டியுள்ளார் அஞ்சலி.
இந்தநிலையில் மலையாளத்தில் 'ரோசாப்பூ' என்கிற படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். கடந்த ஆறு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் முதன்முதலாக 'பியான்ஸ்' என்கிற படத்தில் ஜெயசூர்யாவுக்கு ஜோடியாக நடித்த அஞ்சலி, அதன்பின்னர் மலையாளத்தில் நடிக்கவே இல்லை.
தற்போது ரோசாப்பூ படத்தில் பிஜூமேனனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்தப்படத்தில் தமிழ் பாதி, கன்னடம் பாதி கலந்த, துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடிக்க இருக்கிறார் அஞ்சலி. ஆகஸ்ட்-23 முதல் எர்ணாகுளத்தில் இதன் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.