ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
தமிழில் எல்லாம் அவன் செயல், சேவற்கொடி ஆகிய படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பாமா. சமீபத்தில் மலையாள சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை பாமா, தனது வாய்ப்புகளை கடந்த இரண்டு வருடங்களாக யாரோ தடுக்கிறார்கள் போல தெரிகிறது என போகிறபோக்கில் ஒரு திரியை கொளுத்தி போட்டார். ஆனால் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாக பாமாவின் வாய்ப்புகளையும் நடிகர் திலீப் தான் தடுத்துள்ளார் என ஊடகங்களில் செய்தி பரவ ஆரம்பித்துவிட்டது.
பின்னே.. இப்போது பலரும் திலீப் தங்களது திரையுலக வாழ்க்கையில் எப்படியெல்லாம் விளையாடினார் என குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் சூழலில் பாமா இப்படி பொத்தாம் பொதுவாக சொன்னால் எல்லோரின் பார்வையும் திலீப் பக்கம் திரும்புவது இயல்புதானே.. இப்படித்தானே சமீபத்தில் பாதிக்கப்பட்ட நடிகை கூட, சில வருடங்களுக்கு முன் தனது வாய்ப்புகளை நடிகர் ஒருவர் தடுக்கிறார் என கூறியபோது அப்போதும் அது திலீப் தான் என சொல்லப்பட்டது..
சமீபத்தில் நடிகைக்கு ஏற்பட்ட சங்கடமான நிகழ்வில் திலீப் தான் காரணமென்று உறுதியாகி, அதன் விளைவாக இப்போது நடிகரும் சிறையில் இருக்கிறார். ஆக அப்போது அந்த நடிகையின் வாய்ப்புகளை தடுத்தது திலேப் தான் என்றாகி விட்டது. இந்த நேரத்தில் பாமாவும் இப்படி ஒரு குண்டை தூக்கிப்போட்டால்..? ஆனால் பாமாவோ, நான் பொதுவாக சொன்னேன்.. நிச்சயமாக எனது வாய்ப்புகளை திலீப் தடுக்கவில்லை.. தயவுசெய்து இதை யாரும் பெரிதாக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.