இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் மலையாள நடிகர் திலீப்பிற்கான ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரல்கள் இன்னும் அவ்வப்போது ஒலித்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்போது திலீப்பிற்கு ஆதரவாக குரல் எழுப்பியிருப்பது எப்போதுமே அமைதியாக காணப்படும் ஆஸ்கர் விருதுபெற்ற சவுண்ட் இன்ஜினியரான ரசூல் பூக்குட்டி தான். திலீப்பிற்கு ஆதரவாக மலையாள சினிமா நடிகர் சங்கத்தை நோக்கி சற்றே காட்டமாகவே கேள்வி எழுப்பியுள்ளார் ரசூல் பூக்குட்டி.
“மலையாள திரையுலகினரை பார்க்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. குற்றவாளி என ஒருவர் சந்தேகத்தின் பெயரால் போலீசாரால் கைது செய்யப்பட்டாலும் கூட, நீதிமன்ற தீர்ப்பு அதை உறுதி செய்யும் வரை அவரை குற்றவாளியாக கருதக்கூடாது என்று சட்டமே சொல்கிறது. ஆனால் திலீப் விஷயத்தில் அவர் கைது செய்யப்பட்டதுமே நிறைய பேர் அவரை விட்டு விலகினார்கள். நடிகர் சங்கமும் அவர் தான் குற்றவாளி என முடிவு செய்து, உடனடியாக நடிகர் சங்கத்திலிருந்து விலக்கும் முடிவை எடுத்தது.. இந்த அவசரம் எதனால்..? இந்த விஷயத்தில் நீதிமன்றம் நியாயமான பதிலை சொல்லும் என நம்புகிறேன்” என கூறியுள்ளார் ரசூல் பூக்குட்டி.