சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் |
முன்பு சிம்ரனின் மானேஜர் அருண். இவர் தற்போது வசுந்தரா, ஓவியா உள்ளிட்டவர்களின் காரியதரிசி. மீடியாக்காரர்கள் இவரிடம் ஓவியா, வசுந்தராவிடம் பேட்டி எடுக்க வேண்டும் , போட்டோ எடுக்க வேண்டும் என கேட்டால், மற்ற மானேஜர்கள் மாதிரி உடனடியாக மாட்டேன் என சொல்லாமல் ஓ.கே.... அதற்கென்ன எடுத்துட்டா போச்சு...என்பவர்., அந்த மீடியாக்காரரின் செல் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு அன்றோ.,அதற்கு அடுத்த நாளோ ஃபோன் செய்து ஒரு 5 நிமிஷத்துல வந்தீங்கன்னா மேடம் ஃபிரி... நீங்க போட்டோ ஷூட் பண்ணிக்கலாம் பேட்டி எடுத்துக்கலாம்... என அவசரப்படுத்துவாராம்! நிச்சயமாக எந்த ஒரு மீடியா பர்சனாலும் 5 நிமிடத்தில் காமிரா, மைக், ரெக்கார்டர் உள்ளிட்ட சாதனங்களையும் அதற்கான ஆட்கள் நிரம்பிய யூனிட்டையும் ரெடி செய்து கொண்டு உடனடியாக வர முடியாது! இது தெரிந்தே இவ்வாறு அழைப்பு விடுத்து நீங்க கேட்டீங்க.,நான் அப்பாயிண்ட்மென்ட் ரெடி பண்ணிட்டேன்... உங்களால் முடியலை என குற்றம் சுமத்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதே அணுகுமுறையை சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிகையாளரிடமும் அருண் கடைபிடிக்க., கடுப்படித்த அவர் ஓவியாவையும், வசுந்தராவையும் உண்டு இல்லை... என பண்ணுவது வரை ஓயமாட்டேன் என கூறி வருகிறார். பாவம் தான் காரியதரிசியால் காண்ட்ரவர்சிக்கு உள்ளாகும் நடிகைகள்.