பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
விஷாலின் சூப்பர் ஹிட் படமான சண்டக்கோழியின் இரண்டாம் பாகம் தயாராகிறது. முதல் பாகத்தை இயக்கிய லிங்குசாமி இயக்குகிறார். விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கிறார். முந்தைய பாகத்தில் நடித்த ராஜ்கிரண் மீண்டும் நடிக்கிறார்.
படத்தின் கதை களம் மதுரை. ஆனால் ஒட்டுமொத்த யூனிட்டையும் மதுரைக்கு அழைத்துச் செல்வதிலும், மக்கள் கூடும் இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதிலும் நிறைய சிக்கல்கள் இருப்பதால். படப்பிடிப்பை சென்னையிலேயே நடத்த முடிவு செய்தனர்.
இதற்காக சென்னை பின்னி மில்லில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மதுரையின் முக்கிய வீதிகளை அப்படியே மறு உருவாக்கம் செய்கிறார்கள். இதில் 500 கடைகள் கொண்ட பஜார், பெரிய கோவில் ஆகியவை முக்கியமானதாக இருக்கும். 6 கோடி ரூபாய் செலவில் உருவாகும் இதனை கலை இயக்குனர் ராஜீவன் வடிவமைக்கிறார். 500 தொழிலாளர்கள் இதில் ஈடுப்படுத்தப்படுகிறார்கள். இந்த ஷெட் அமைக்கும் பணி பூஜையுடன் தொடங்கியது. இயக்குனர் லிங்குசாமி, கலை இயக்குனர் ராஜீவன், விஷால் பிலிம் பேக்டரி நிர்வாகி எம்.எஸ்.முருகராஜ் உள்பட பலர் இதில் கலந்த கொண்டனர்.