பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கோலாகலமாக துவங்கியுள்ளது.. இந்தவிழாவில் இந்தியா மற்றும் அதன் துணைக்கண்டங்களை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. உலகமெங்கிலும் இருந்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொளும் இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த திரைப்பட விழா கொண்டாட்டத்தின்போது நமது இந்திய தேசியகொடியை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் சேர்ந்து ஏற்றினார்கள். மேலும் நமது தேசிய கீதத்தை அங்குள்ளவருடன் இணைந்தும் பாடினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு நமது தேசிய கொடியை ஏற்றிய முதல் நடிகையும் இவர் தான். “70 வது இந்திய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேளையில் இங்கே நம் தேசிய கொடியை ஏற்றியது எனக்கும் எனது மகள் ஆரத்யாவுக்கும் பசுமையான நினைவுகளாக பதிந்திருக்கும்” என் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்...