ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் கோலாகலமாக துவங்கியுள்ளது.. இந்தவிழாவில் இந்தியா மற்றும் அதன் துணைக்கண்டங்களை சேர்ந்த திரைப்படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. உலகமெங்கிலும் இருந்து திரையுலக பிரபலங்கள் கலந்துகொளும் இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆரத்யாவுடன் கலந்துகொண்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்த திரைப்பட விழா கொண்டாட்டத்தின்போது நமது இந்திய தேசியகொடியை ஐஸ்வர்யா ராயும் அவரது மகள் ஆரத்யாவும் சேர்ந்து ஏற்றினார்கள். மேலும் நமது தேசிய கீதத்தை அங்குள்ளவருடன் இணைந்தும் பாடினார்கள். இந்த விழாவில் கலந்துகொண்டு நமது தேசிய கொடியை ஏற்றிய முதல் நடிகையும் இவர் தான். “70 வது இந்திய சுதந்திர தினத்தை நாம் கொண்டாடும் வேளையில் இங்கே நம் தேசிய கொடியை ஏற்றியது எனக்கும் எனது மகள் ஆரத்யாவுக்கும் பசுமையான நினைவுகளாக பதிந்திருக்கும்” என் கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராய்...