வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
வாக்களித்த வாக்காளர்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் போல, கடந்த ஒரு வாரத்தில் 'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக வாக்களித்த ரசிகர்களை ஏமாற்றிவிட்டார் 'பிக் பாஸ்'. கடந்த திங்கள் கிழமையன்று இந்த வாரத்திற்கான எவிக்ஷனுக்காக ரைசா தவிர மற்ற அனைவரும் தேர்வானார்கள். அடுத்து வையாபுரி, சினேகன் ஆகிய இருவரில் யாரையாவது ஒருவரைக் காப்பாற்றலாம் என போட்டியாளர்களிடம் பிக் பாஸ் சொன்னதில் மற்றவர்கள் சேர்ந்து வையாபுரியைக் காப்பாற்றினார்கள். அதற்குப் பிறகு நாமினேஷனில் பிந்து மாதவி, கணேஷ், சினேகன், சக்தி, ஆரவ், காயத்ரி உள்ளிட்ட 6 பேர் இருந்தார்கள்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை திடீரென போட்டியாளர்களிடம் ஐந்து கேள்விகள் கேட்டதில் சரியான பதில்களைச் சொன்னதாக காயத்ரியைக் காப்பாற்றினார் பிக் பாஸ். அதனால், காயத்ரியை இந்த வாரம் வெளியேற்ற வாக்களித்த பலரும் கோபமடைந்து சமூக வலைத்தளங்களில் பிக் பாஸின் இந்த திடீர் காயத்ரி பாசத்திற்கு அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தார்கள்.
நேற்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசனின் முன்னாள் கதாநாயகி ஸ்ரீப்ரியா, காமெடி நடிகர் சதீஷ் இருவரும் கலந்து கொண்டு சில கேள்விகளை, சந்தேகங்களைக் கேட்டனர். அப்போது காயத்ரி காப்பாற்றப்பட்டதை கண்டித்து ஸ்ரீப்ரியா கேள்வி கேட்டார். அதை முன்னரே சொல்லியிருக்க வேண்டும் என்றார். அவரின் கேள்விக்கு பதிலளித்த 'பிக் பாஸ்', இது 'இன்டர்நேஷனல் ஃபார்மேட்', யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் காப்பாற்றப்படுவார்கள், எலிமினேட் ஆனவர்களும் மீண்டும் உள்ளே வரலாம், புதிதாக யார் வேண்டுமானாலும் உள்ளே போகலாம் என்று சொன்னார்.
ஆனால், பிக் பாஸின் இந்த பதில் ரசிகர்களுக்குத் திருப்தியளிப்பதாக இல்லை. இந்த வாரம் காயத்ரி, சக்தி இருவரில் ஒருவர்தான் குறைந்த வாக்குகளைப் பெற்று வெளியேறுவார்கள் என்று நினைத்திருந்த நிலையில் காயத்ரியை வேண்டுமென்றே நிகழ்ச்சியில் தக்க வைத்துக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்துள்ளது.