சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் தொடர்பாக உ.பி., முதல்வருக்கு, நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உபி.,யில் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க கைலாஷ் சத்யார்த்தி உ.பி., முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது போன்று இனியும் நிகழக் கூடாது. இச்சம்பவத்தால் இந்தியாவே துயரத்தில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என தெரிவித்துள்ளார்.