'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உ.பி., மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இச்சம்பவம் தொடர்பாக உ.பி., முதல்வருக்கு, நடிகர் கமல் டுவிட்டர் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கமல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், உபி.,யில் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்க கைலாஷ் சத்யார்த்தி உ.பி., முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது போன்று இனியும் நிகழக் கூடாது. இச்சம்பவத்தால் இந்தியாவே துயரத்தில் ஆழ்ந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல், நீட்தேர்வை ஒத்திப்போட மத்திய அரசு ஒத்துழைக்குமாம். குதிரைகளை பிற்பாடும் பேரம் பேசலாம். மாணவர் எதிர்காலம் பற்றியது. தயைகூர்ந்து உடனே பேசுங்கள் என தெரிவித்துள்ளார்.