'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்றபோது அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தார் என்பதோடு, அவரை பிக்பாஸில் உள்ளவர்கள் யாரேனும் திட்டினால் கூட ஓவியாவுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுத்தனர். அந்த அளவுக்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார் ஓவியா.
ஒரு கட்டத்தில் அவர் ஆரவை காதலிப்பதாகவும், அதையடுத்து ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது. அதன்பிறகு பிக்பாஸில் இருந்து வெளியேறினார் ஓவியா. இந்த நிலையில், ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், அவர் மீது பிக்பாஸ் செட் போடப்பட்டிருக்கும் சென்னையை அடுத்துள்ள நசரத் பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு ஓவியாவுக்கு போலீஸ் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாம். அதனால் விரைவில் நசரத் பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி ஓவியா விளக்கமளிப்பார் என்று தெரிகிறது.