‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
டிவி சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண பேட்டிகளில் கூட பிரச்சினைககளை உண்டு பண்ணி வருகிறார்கள். அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் விஐபி-2 படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவரை டென்சன் செய்வது போல் கேள்வி கேட்டதால் மைக்கை பிடுங்கி எரிந்து விட்டு வெளியேறினார் தனுஷ்.
அதேபோல் சமீபத்தில் நேனே ராஜூ நேனே மந்திரி படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் ராணாவும் டிவி 9 என்ற தெலுங்கு சேனலுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளினி, ஆந்திராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்த போதை பொருள் வழக்கு சம்பந்தமான விசாரணை குறித்து ராணாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். முக்கியமாக, அவருக்கும் அதில் தொடர்பு இருப்பதைப்போன்று கேள்வி கேட்க தொகுப்பாளினியிடம் தனது கோபத்தை கைகளை நீட்டியபடி வெளிப்படுத்தியிருக்கிறார் ராணா. அதையடுத்து அது சம்பந்தமான கேள்விகளை நிறுத்திக்கொண்டார்களாம்.
ஆனபோதும், பின்னர் அந்த பேட்டியை சேனலில் ஒளிபரப்பியபோது, ராணாவிடம் போதை பொருள் சம்பந்தமாக தொகுப்பாளினி கேள்வி கேட்பதையும், அதற்கு ராணா கடும் கோபத்தை வெளிப்படுத்தியதையும் அப்படியே காண்பித்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த ராணா, இந்த வீடியோ போலியாக தயார் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, ராணாவிடம் அந்த மாதிரி கேள்வி கேட்ட தொகுப்பாளினியை ராணாவின் ரசிகர்களும் எச்சரித்து வருகிறார்களாம்.