தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
டிவி சேனல்கள் தங்களது டிஆர்பியை உயர்த்த வேண்டும் என்பதற்காக சாதாரண பேட்டிகளில் கூட பிரச்சினைககளை உண்டு பண்ணி வருகிறார்கள். அந்தவகையில், சில வாரங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷ் விஐபி-2 படத்தின் பிரமோஷனில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது அவரை டென்சன் செய்வது போல் கேள்வி கேட்டதால் மைக்கை பிடுங்கி எரிந்து விட்டு வெளியேறினார் தனுஷ்.
அதேபோல் சமீபத்தில் நேனே ராஜூ நேனே மந்திரி படத்தின் விளம்பரத்திற்காக நடிகர் ராணாவும் டிவி 9 என்ற தெலுங்கு சேனலுக்காக பேட்டி கொடுத்துள்ளார். அப்போது அவரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளினி, ஆந்திராவில் கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்த போதை பொருள் வழக்கு சம்பந்தமான விசாரணை குறித்து ராணாவிடம் கேள்வி கேட்டிருக்கிறார். முக்கியமாக, அவருக்கும் அதில் தொடர்பு இருப்பதைப்போன்று கேள்வி கேட்க தொகுப்பாளினியிடம் தனது கோபத்தை கைகளை நீட்டியபடி வெளிப்படுத்தியிருக்கிறார் ராணா. அதையடுத்து அது சம்பந்தமான கேள்விகளை நிறுத்திக்கொண்டார்களாம்.
ஆனபோதும், பின்னர் அந்த பேட்டியை சேனலில் ஒளிபரப்பியபோது, ராணாவிடம் போதை பொருள் சம்பந்தமாக தொகுப்பாளினி கேள்வி கேட்பதையும், அதற்கு ராணா கடும் கோபத்தை வெளிப்படுத்தியதையும் அப்படியே காண்பித்திருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த ராணா, இந்த வீடியோ போலியாக தயார் செய்யப்பட்டிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளார். அதோடு, ராணாவிடம் அந்த மாதிரி கேள்வி கேட்ட தொகுப்பாளினியை ராணாவின் ரசிகர்களும் எச்சரித்து வருகிறார்களாம்.