மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பிரேமம், காளி ஆகிய மலையாளப் படங்களில் நடித்த சாய் பல்லவி, தெலுங்கில் பிடா படத்தில் நடித்தவர் தற்போது நானியுடன் எம்சிஏ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு, டைரக்டர் ஏ.எல்.விஜய் இயக்கும் கரு படத்திலும் நடிக்கும் சாய்பல்லவி, சில இயக்குனர்களிடம் கதைகள் கேட்டு வருகிறார். மேலும், பிரேமம் படத்திற்கு பிறகு தமிழில் விக்ரமின் கெட்ச் படத்தில் நடிக்கயிருந்த சாய்பல்லவி, அந்த படத்தின் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதால், அந்த படத்தில் இருந்தே விலகி விட் டார். அதனால் அந்த வேடத்தில் பின்னர் தமன்னா நடித்தார்.
இந்தநிலையில், இப்போது வரை கிளாமராக நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்து வருகிறார் சாய்பல்லவி. அதோடு, அவரது பாப்புலாரிட்டியை கருத்தில் கொண்டு ஜவுளி, நகைக் கடை திறப்பு விழாக்களுக்கு அழைத்த வண்ணம் உள்ளார்களாம். ஆனால் சாய்பல்லவிக்கு அந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் விருப்பம் இல்லையாம். அதனால் கடைகள் திறப்பு விழா சம்பந்தமாக யாரும் என்னை அணுக வேண்டாம் என்று தனது சார்பில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.